பொய் சொல்லலேன்னா உணவு ஜீரணிக்காது.. தினம் ஒரு புது பொய் சொல்வார்… பா.ஜ.க. முதல்வரை தாக்கிய கமல் நாத்

 

பொய் சொல்லலேன்னா உணவு ஜீரணிக்காது.. தினம் ஒரு புது பொய் சொல்வார்… பா.ஜ.க. முதல்வரை தாக்கிய கமல் நாத்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பொய் சொல்லலேன்னா உணவு செரிக்காது, தினமும் ஒரு புது பொய் சொல்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கமல் நாத் கிண்டல் அடித்தார்.

மத்திய பிரதேசம் டெபால்பூரில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான கமல் நாத் கலந்து கொண்டார். டிராக்டர் பேரணிக்கு பிறகு கமல் நாத் பேசுகையில் கூறியதாவது; முதல்வரின் பொய்களை மாநில மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு பொய் சொல்லலேன்னா உணவை ஜீரணிக்க முடியாது. அவர் தினமும் ஒரு புது பொய் சொல்வார்.

பொய் சொல்லலேன்னா உணவு ஜீரணிக்காது.. தினம் ஒரு புது பொய் சொல்வார்… பா.ஜ.க. முதல்வரை தாக்கிய கமல் நாத்
கமல் நாத்

கடந்த காலங்களில் சுமார் 15 ஆயிரம் அறிவிப்புகளை அவர்கள் அமல்படுத்தப்படவில்லை. நீங்கள் (பொதுமக்கள்) அவரது அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். இது தவறாக வழிநடத்துவது மற்றும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து உங்கள் மனதை திசை திருப்புவதாகும். நாட்டின் முக்கிய பிரச்சினைகளிலிருந்து இளைஞர்களை பா.ஜ.க. திசை திருப்புகிறது. பா.ஜ.க.வில் எந்தவொரு சுதந்திர போராட்ட வீரரும் கிடையாது. தேசபக்தி பெயரில் குடிமக்களின் உணர்வுகளில் பா.ஜ.க. விளையாடுகிறது.

பொய் சொல்லலேன்னா உணவு ஜீரணிக்காது.. தினம் ஒரு புது பொய் சொல்வார்… பா.ஜ.க. முதல்வரை தாக்கிய கமல் நாத்
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

இந்த 3 கருப்பு சட்டங்கள் வாயிலாக வேளாண் துறையை தனியார்மயமாக்குவது நாட்டில் பேரழிவை கொண்டு வரும். ஏனெனில் தானியங்களுக்கு கையிருப்பில் வரம்பு இல்லை. இது தொழிலதிபர்களுக்கு ஆதாயத்தையும், விவசாயிகளுக்கு தீங்கும் விளைவிக்கும். இந்த தனியார்மயமாக்கல் அவர்களின் லாபத்துக்காக விவசாயிகளின் பாக்கெட்டை பாதிக்கும் அதனால்தான் அவர்கள் டெல்லியின் எல்லைகளில் போராடுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.