பா.ஜ.க.வின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பதை இடைத்தேர்தல்கள் காட்டும்.. கமல் நாத்

 

பா.ஜ.க.வின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பதை இடைத்தேர்தல்கள் காட்டும்.. கமல் நாத்

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பதை இடைத்தேர்தல்கள் காட்டும் என முன்னாள் முதல்வர் கமல் நாத் தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள 27 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் நவம்பர் இறுதிக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ளபோதிலும் ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் இடைத்தேர்தலை மனதில் வைத்து காய்களை நகர்த்தி வருகின்றன. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே பா.ஜ.க.வால் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும். அதேசமயம் இடைத்தேர்தலில் தோற்று விட்டால் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும்.

பா.ஜ.க.வின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பதை இடைத்தேர்தல்கள் காட்டும்.. கமல் நாத்
கமல் நாத்

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. பருல் சாஹூ நேற்று முன்தினம் காங்கிரசில் இணைந்தார். மத்திய பிரதேச காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கமல் நாத் மற்றும் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் பருல் சாஹூ அந்த கட்சியில் இணைந்தார். பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்,ஏ. பருல் சாஹூ காங்கிரஸ் கட்சியில் இணைந்தது மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.வின் மோசடி அரசியலுக்கு மக்கள் பொருத்தமான பதிலடி கொடுப்பதை இடைத்தேர்தல்கள் காட்டும்.. கமல் நாத்
பருல் சாஹூவுடன் கமல் நாத்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல் நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், இடைத்தேர்தல்கள் சில சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மட்டுமல்ல, முழு மாநிலமும் இந்த இடைத்தேர்தல்களை பார்க்கின்றன, ஏனெனில் பா.ஜ.க. மேற்கொண்ட மோசடி அரசியலுக்கு மக்கள் எவ்வாறு பொருத்தமான பதிலை அளிக்கிறார்கள் என்பதை அது காண்பிக்கும் என தெரிவித்தார்.