நான் கோவிட் குறித்த தரவு கேட்டால், என் மீது எப்.ஐ.ஆர். போடுவார்கள்.. பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டிய கமல் நாத்

 

நான் கோவிட் குறித்த தரவு கேட்டால், என் மீது எப்.ஐ.ஆர். போடுவார்கள்.. பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டிய கமல் நாத்

நான் கோவிட் குறித்த தரவு கேட்டால், என் மீது எப்.ஐ.ஆர். போடுவார்கள் என்று மத்திய பிரதேச பா.ஜ.க. அரசை கமல் நாத் குற்றம் சாட்டினார்.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கமல் நாத் கூறியதாவது: நான் கோவிட் குறித்த தரவு (புள்ளிவிவரம்) கேட்டால், அவர்கள் என் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்வார்கள். நான் இந்தியா சிறந்தது என்று கூறும்போது, நாம் அதை சொல்வதில் பெருமிதம் அடைந்தோம்.

நான் கோவிட் குறித்த தரவு கேட்டால், என் மீது எப்.ஐ.ஆர். போடுவார்கள்.. பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டிய கமல் நாத்
பா.ஜ.க.

ஆனால் இப்போது நிலைமை சிறந்த இந்தியாவை தாக்கியுள்ளது. அவர்கள் என்னை ஒரு துரோகி என்று அழைக்கிறார்கள். பல உடல்கள் தகனத்தை அடைந்தன. பதிவுகள் கிடைக்கின்றன. அவர்கள் அதை வெளிப்படுத்த வேண்டும், என்ன சிரமம்? இதற்காக நான் கேட்டால், நான் அரசியல் செய்வதாக அவர்கள் சொல்கிறார்கள்.

நான் கோவிட் குறித்த தரவு கேட்டால், என் மீது எப்.ஐ.ஆர். போடுவார்கள்.. பா.ஜ.க. அரசை குற்றம் சாட்டிய கமல் நாத்
கோவிட்-19ஆல் இறந்தவர் சடலம்

நான் தடுப்பூசி குறித்து பேசும்போது, தடுப்பூசி செலுத்தப்பட்ட தொடர்பான தகவல்களை கேட்கும்போது, அவர்கள் நான் சடலங்களில் அரசியல் செய்வதாக அவர்கள் சொல்கிறார்கள். இது விமர்சனம் அல்ல. அது உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.