கமலுக்கு ஆதரவு தெரிவித்த சிரவை ஆதீனம் குமரகுரு அடிகள் : பூரிப்பில் தொண்டர்கள்!

 

கமலுக்கு ஆதரவு தெரிவித்த சிரவை ஆதீனம் குமரகுரு அடிகள் : பூரிப்பில் தொண்டர்கள்!

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் களம் காண்கிறார் அவருக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கோவை தெற்கு மும்முனை போட்டி நிலவுவதால் அந்த தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ளும் நிலையில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர். அதேபோல் கமலுக்கு ஆதரவாக சுஹாசினி களமிறங்கியுள்ளார்.

கமலுக்கு ஆதரவு தெரிவித்த சிரவை ஆதீனம் குமரகுரு அடிகள் : பூரிப்பில் தொண்டர்கள்!

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கல்வி சேவை செய்து வரும் சிரவை ஆதீனம் குருமகா சன்னிதானங்களைச் சந்தித்து இன்று கலந்துரையாடினார். குமரகுரு அடிகளார் கோவை தெற்கில் போட்டியிடும் தலைவர் கமல் ஹாசனுக்கு தனது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். அத்துடன் இன்றைய காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல், கல்வி வியாபாரமாக மாறிவிட்டது மிகவும் வேதனையளிக்கிறது.

உங்களுடைய செயல்பாடுகளை நல் மாற்றத்திற்கானதாய் இருக்கிறது. கல்விக்காக உங்கள் குரல் தொடர்வது சிறப்பு. தொடர்ந்து ஒலிக்க வேண்டும். நீங்கள் வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்களையும், வரும் தேர்தலில் வெற்றி பெற ஆதரவினை தெரிவித்து கொள்வதாகவும் கமல் ஹாசனிடம் அவர் தெரிவித்துள்ளார்.