“புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதியுங்கள்” : கமல் ஹாசன் ட்வீட்!

 

“புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதியுங்கள்” : கமல் ஹாசன் ட்வீட்!

புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என கமல் ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. இதை தொடர்ந்து வீடுகளில் இருந்தவாறே மாணவர்கள் ஆன்லைனில் கல்வி கற்க தொடங்கினர்.

“புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதியுங்கள்” : கமல் ஹாசன் ட்வீட்!


இதையடுத்து கடந்த மாதம் ஊரடங்கு தளர்வின் போது, கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங் மற்றும் வேளாண் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளும், தங்கும் விடுதிகளும் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. மாணவர்கள் உடல் வெப்ப நிலையை கண்டறிந்தும், அவர்கள் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தியும் கல்லூரி நிர்வாகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

“புறநகர் ரயில்களில் மாணவர்களை அனுமதியுங்கள்” : கமல் ஹாசன் ட்வீட்!

இருப்பினும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்து செல்ல பேருந்து சேவை மட்டுமே நடைமுறையில் உள்ளது. மாறாக புறநகர் ரயிலில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. இதனால் வெகுதொலைவில் இருந்து கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் புறநகர் ரயில் சேவை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்விச்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. ஏழை மாணவர்கள் நகருக்குள் வந்து செல்ல நம்பி இருப்பது புறநகர் ரயில்களையே. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.