“ரேஷன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல” – கமல் ஹாசன் தாக்கு!

 

“ரேஷன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல” – கமல் ஹாசன்  தாக்கு!

ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல என்று கமல் ஹாசன் விமர்சித்துள்ளார்.

“ரேஷன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல” – கமல் ஹாசன்  தாக்கு!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.2500, அரிசி, கரும்பு, முந்திரி, திராட்சை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி 4 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்பை மக்கள் ஆர்வமுடன் பெற்று வருகின்றனர். இதுவொருபுறமிருக்க, தமிழக அரசு தரும் பொங்கல் பரிசை அதிமுக ஓட்டாக மாற்ற விரும்புகிறது என்றும் அதனால் ரேஷன் கடை வாசல்களில் அதிமுக கட்சியின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாக திமுக குற்றம் சாட்டி நீதிமன்றம் வரை சென்றது.

“ரேஷன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல” – கமல் ஹாசன்  தாக்கு!

இதற்கு நீதிமன்றம் தனது கண்டனத்தையும் பதிவு செய்தது. நேற்றைய தினம், சேலத்தில் பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடையில் இரட்டை இலை சின்னம் அச்சடித்து வாக்கு கேட்கும்விதமாக நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம். ஒரிஜினல் நரிகள் மன்னிக்க” என்று குறிப்பிட்டுள்ளார்.