“வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்து நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்” – கமல் ஹாசன் ட்வீட்!

 

“வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்து நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்” – கமல் ஹாசன் ட்வீட்!

சுதந்திர காற்றை சுவாசிக்க ஏராளமான வீரர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதன் படி நாட்டின் 74 வது சுதந்திர தின நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் காலை 7.30 மணிக்கு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.

“வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்து நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம்” – கமல் ஹாசன் ட்வீட்!

அதேபோல தமிழகத்தை பொறுத்தவரையில் முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் உள்ள கொத்தளத்தில் கொடியேற்றி வைத்தார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்து கூறி வருகின்றனர்.


இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல் ஹாசன், “74வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம். கொரோனா தொற்றிலிருந்தும், பசி, வறுமை, ஊழல், பிரித்தாளும் சக்திகள் இவற்றிடமிருந்தும், நாடும் தமிழகமும் விடுதலையடைய உழைப்போம். வளமான வாழ்க்கை அனைவருக்கும் என்ற நம் கனவு நனவாகட்டும். ஜெய்ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.