சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் மயிலாப்பூரில் போட்டி?

 

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் மயிலாப்பூரில் போட்டி?

வரும் சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் மயிலாப்பூரில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது செயல்பாடு கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக என அவர் அறிவித்திருந்த நிலையில், அதுகுறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 2 ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டார். தனியார் ஓட்டலில் மூன்றாவது நாளாக இன்றும் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில்எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் மயிலாப்பூரில் போட்டி?

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்துக்குப் பின், தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதிக செல்வாக்கு பெற்றுள்ளதாகவும் தனியார் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.