ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

 

ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

ஆலந்தூர், கோவை தெற்கு ஆகிய 2 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதி, மயிலாப்பூர் , திநகர் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுத்தது. அதேபோல் கோவை, ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை 2019 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பெற்றிருந்தது. சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்றும், தனது கட்சிக்கு தானே முதல்வர் வேட்பாளர் என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தார். இந்நிலையில் கமல் ஹாசன் மயிலாப்பூர் திநகர் உள்ளிட்ட இரு பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டது.

ஆலந்தூர், கோவை தெற்கு தொகுதிகளில் போட்டியிடும் கமல்ஹாசன்!

இதனிடையே கமல்ஹாசன் எங்கு போட்டியிடலாம் என்பதை மக்களிடமே கேட்க இந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவது குறித்து உங்கள் கருத்து என்ன ? கமல்ஹாசன் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டுமா? உங்கள் கருத்து என்ன? என்பது போன்ற போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டியிருந்தன. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆலந்தூர், கோவை தெற்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.