“நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்” சூரப்பாவுக்கு கமல் ஹாசன் ஆதரவு !

 

“நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்” சூரப்பாவுக்கு  கமல் ஹாசன் ஆதரவு !

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் குறித்து விசாரணை ஆணையம் அமைத்ததற்கு கமல் ஹாசன் எதிர்ப்பு தெரிவியுள்ளார்.

“நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்” சூரப்பாவுக்கு  கமல் ஹாசன் ஆதரவு !

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அத்துடன் அண்ணா பல்கலை,. சிறப்பு அந்தஸ்து தொடர்பாக தமிழக அரசின் ஒப்புதலை பெறாமலே சூரப்பா தன்னிசையாக செயல்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

“நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன்” சூரப்பாவுக்கு  கமல் ஹாசன் ஆதரவு !

இதனால் சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இதற்கான விசாரணையும் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியுள்ளது.ஆனால் தன் மீதான புகார்களை மறுத்த சூரப்பா, தான் எந்த ஊழலும் செய்யவில்லை, விசாரணைக்கு தயார் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ, ” சூரப்பாவின் கொள்கை சார்புகள் அரசியல் நிலைபாடுகளில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன். ஊழலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் அவரது அடையாளத்தை அழிப்பதா? ஊழல்வாதிகளை ஓட ஓட விரட்ட வேண்டும் எனவும் கமல் ஹாசன் ஆவேசமாக பேசியுள்ளார்.