வாக்கு எண்ணும் மையங்களில்… கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

 

வாக்கு எண்ணும் மையங்களில்… கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

தமிழக சட்டமன்றத் தேர்தளுக்கான வாக்குப்பதிவு 234 தொகுதிகளிலும் நேற்று நடந்து முடிந்தது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 71.79 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் வாக்களிக்க வரவில்லை. அதுமட்டுமின்றி, வெளியூர்களில் வசிக்கும் பலர் வாக்குகளை பதிவு செய்யவில்லை. இதனால், வாக்குப்பதிவு குறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

வாக்கு எண்ணும் மையங்களில்… கமல்ஹாசன் திடீர் ஆய்வு!

வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்கள் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறு எதிர்கட்சித் தலைவர்கள் அவரவர் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அதன் படி, தொண்டர்கள் வாக்கு எண்ணும் மையங்கள் அருகே முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கல்லூரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நேற்று தேர்தல் நடந்து கொண்டிருந்த போதே கோவை தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கமல்ஹாசன் புகாரளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.