‘வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது’ மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

 

‘வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது’ மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

இன்று12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது உட்பட தகவல்கள் வெளிவந்துவிட்டன. வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு தலைவர்கள் தங்களின் வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு தங்கள் வாழ்க்கையிலிருந்து உதாரணங்களைக் கூறி நம்பிக்கை அளிக்கவும் செய்கின்றனர். குறிப்பாக தற்கொலை போன்ற எண்ணங்களுக்கு மாணவர்கள் இடம்கொடுத்துவிடக் கூடாது என்று அழுத்தமாக வலியுறுத்துகின்றனர்.

‘வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது’ மாணவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

அந்த வரிசையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

மாணவ கண்மணிகாள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள்.பெறாதோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது.

12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பிக்க, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆல்ன்லைன் வழியாக விண்ணபிக்கலாம் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், ஓரிரு பாடத்தில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.