“ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணினி” கமல் ஹாசன் அறிவிப்பு!

 

“ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணினி” கமல் ஹாசன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கணினி வழங்கப்படும் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

“ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணினி” கமல் ஹாசன் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் கடந்த இரண்டு நாட்களாக சேலம், காஞ்சிபுரம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அந்த வகையில் இன்று வேலூரில் கமல் ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒரு கணினி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் திருப்பத்தூரில் மக்கள் மத்தியில் பேசிய கமல், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தால், உங்களின் நட்பு வட்டாரம் பெருகும் ; நல்லவர்கள் கட்சியில் அதிகம் சேருவார்கள் என்று பேசினார்.

“ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கணினி” கமல் ஹாசன் அறிவிப்பு!

முன்னதாக காஞ்சிபுரம் பரப்புரை கூட்டத்தில் பேசிய கமல் ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால், வீடு தோறும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் செழுமைக் கோட்டுக்கு மேல் வர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.