“கடைசி காலம் உங்களோட தான்” – உருகிய கமல்ஹாசன்

 

“கடைசி காலம் உங்களோட தான்” – உருகிய கமல்ஹாசன்

கடந்த மக்களவை தேர்தலில் கோவையில் கணிசமான வாக்குகளை மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்றிருந்தது. குறிப்பாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் குறிப்பிடத்தகுந்த வாக்குகளை அள்ளினார். இதனால் தான் மகேந்திரன் சிங்காநல்லூரில் போட்டியிட கமல் கோவை தெற்கில் போட்டியிடுகிறார். ஒரே மாவட்டத்துக்குள் இருவரும் போட்டியிட்டால் அதன் அதிர்வுகள் பயங்கரமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அதற்கேற்றார் போல கமல் அதிகப்படியான பிரச்சாரங்களை கோவையில் மேற்கொள்கிறார்.

Image

நேற்று மகேந்திரனை ஆதரித்து சிங்காநல்லூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய கமல், “எங்கள் கட்சி வேட்பாளர்கள் யாரும் இதுவரை சிறை சென்றதே இல்லை. அவர்கள் மக்களுக்கு நற்பணி செய்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். எங்களை வெளியூர்காரர்கள் என்கின்றனர். தமிழர்களுக்கு யாதும் ஊரே, யாவரும் கேளிர். என்னை வெளியூர்க்காரர் என்று விமர்சிப்பவரே மயிலாப்பூர்காரர்தான்.

“கடைசி காலம் உங்களோட தான்” – உருகிய கமல்ஹாசன்

இலவசம் உங்கள் ஏழ்மையை நிச்சயமாகப் போக்காது. உங்களுக்கான அடிப்படை தேவைகளையும் அது நிவர்த்தி செய்யாது. குடிக்க தண்ணீர் கேட்டால், வாஷிங்மிஷின் தருகின்றனர். இதுதான் அவர்களின் அரசியல் அறிவு. என் 60 வருட வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தியது தமிழகம்தான். என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக அர்ப்பணிக்கிறேன்” என்றார்.