ஹெலிகாப்டரில் பறந்து வந்த கமல்… கோவையன்ஸ் கொடுத்த ஷாக்… ஏமாற்றத்தில் திரும்பினார்!

 

ஹெலிகாப்டரில் பறந்து வந்த கமல்… கோவையன்ஸ் கொடுத்த ஷாக்… ஏமாற்றத்தில் திரும்பினார்!

அரசியல் கட்சியினர் தற்போது பிரச்சார களத்தில் குதித்துள்ளனர். சினிமாவிலேயே தனக்கென தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அரசியல்வாதி நாயகன் கமல். அரசியலிலும் அதே பாணியைக் கையாளுகிறார். மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போல் பிரச்சார வேனிலோ, காரிலோ பிரச்சார தளத்திற்குச் செல்ல மாட்டார். சர் சர்ரென்று வானில் வட்டமிடும் ஹெலிகாப்டரில் தான் பறந்துசெல்கிறார்.

ஹெலிகாப்டரில் பறந்து வந்த கமல்… கோவையன்ஸ் கொடுத்த ஷாக்… ஏமாற்றத்தில் திரும்பினார்!

வேகமாக ஊழலை ஒழிப்பதற்காக அவருக்கு தோன்றிய யோசனைகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். கமல் கோவை தெற்கு தொகுதியில் நிற்பதால், கோவையைச் சுற்றிய பகுதிகளில் தற்போது பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில் இன்று உடுமலைப்பேட்டையில் பிரச்சாரம் செய்ய முடிவு செய்திருந்தார். அதற்காக ஹெலிகாப்டரில் பறந்து அங்கு சென்றிருக்கிறார்.

ஹெலிகாப்டரில் பறந்து வந்த கமல்… கோவையன்ஸ் கொடுத்த ஷாக்… ஏமாற்றத்தில் திரும்பினார்!


வானத்திலிருந்து பார்க்கும்போது சிறிய கூட்டமாக தான் தெரியும் என்பதால் மகிழ்ச்சியுடன் கீழே இறங்கினார். ஆனால் அங்கு தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் ஒரு கட்சியின் தலைவர் வருகிறார் என்ற ஆவல் இல்லாமல் யாருமே அங்கு கூடவில்லை. மக்கள் கூட்டமே இல்லாமல் யாரிடம் பிரச்சாரம் செய்வது என்று எண்ணி வந்த வழியிலேயே பறந்தார் கமல். மக்கள் நீதி மய்யம் கட்சி பிரச்சாரம் ரத்தானதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஹெலிகாப்டரில் பறந்து வந்த கமல்… கோவையன்ஸ் கொடுத்த ஷாக்… ஏமாற்றத்தில் திரும்பினார்!

முன்னதாக ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்ட நிர்வாகங்கள் கமலின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுத்தன. இதனால் அங்கு நடைபெறவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து பிரச்சாரம் ரத்தாவதால் தொண்டர்கள் மத்தியே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.