விருப்பமனு அளித்தவர்களிடம் கமல், பழ.கருப்பையா நேர்காணல்!

 

விருப்பமனு அளித்தவர்களிடம் கமல், பழ.கருப்பையா நேர்காணல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றுகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளும் ஒருபுறம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இதனிடையே, தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்ற கட்சிகள் அவர்களிடம் நேர்காணல் நடத்தி தேர்வு செய்ய திட்டமிட்டிருக்கின்றன.

விருப்பமனு அளித்தவர்களிடம் கமல், பழ.கருப்பையா நேர்காணல்!

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியிருக்கிறது. அண்மையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பழ.கருப்பையாவுடன் இணைந்து கமல்ஹாசன் நேர்காணலை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமையிடத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.

திமுக, அதிமுக என்னும் மாபெரும் கட்சிகளுக்கு எதிராக 3ஆவது அணியாக மக்கள் நீதி மய்யம் உருவாகி வருகிறது. தேர்தலில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்துடன் கைகோர்த்திருக்கும் கமல்ஹாசன், திடீரென அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமாரை சந்தித்து பேசினார். சரத்குமார் திமுகவில் இருந்து வெளியேறிய ஐஜேகே கட்சியுடன் கைகோர்த்திருக்கிறார். அதனால், இந்த மூன்று கட்சிகளும் இணைந்து 3ஆவது அணியாக தேர்தலில் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.