கோழிக்குத்தி யானைகள் முகாமில் கல்பனா யானை மரணம்

 

கோழிக்குத்தி யானைகள் முகாமில் கல்பனா யானை மரணம்

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் உடல்நலக்குறைவால் ஒரு பெண் யானை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, டாப்சிலிப் அடுத்துள்ள கோழிக்குத்தி யானைகள் முகாமில் 28 யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதில் கல்பனா என்ற 41 வயது பெண் யானை, கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை சரியில்லாத நிலையில் வனத்துறை மருத்துவர் சுகுமார் மற்றும் மனோகர் தலைமையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

கோழிக்குத்தி யானைகள் முகாமில் கல்பனா யானை மரணம்

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தது. பின்னர், வனத்துறை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதி முகாமில் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.