நில தகராறில் உறவினர் அடித்துக்கொலை – இளைஞர் போலீசில் சரண்
Oct 22, 2020, 15:35 IST1603361112000
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் உறவினரை அடித்துக்கொன்ற இளைஞர், காவல்நிலையத்தில் சரணடைந்தார். கள்ளக்குறிச்சி மோரைப்பாதையில் வசித்து வருபவர் சர்வேஷ் (34). ரைஸ்மில் இடம் தொடர்பான பிரச்சினையில் அவரது தாய்மாமன் திருநாவுக்கரசு (54) என்பவர்
தலையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சர்வேஷ் திருநாவுக்கரசுவை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்தார். தொடர்ந்து, கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசாரிடமி அவர் சரணடைந்தார்.