கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு திருமண விவகாரம்: நாளை விசாரணை!

 

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு திருமண விவகாரம்: நாளை  விசாரணை!

எம்எல்ஏ பிரபு திருமணம் செய்த பெண்ணின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு திருமண விவகாரம்: நாளை  விசாரணை!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு நேற்று தியாகதுருகம் பகுதியை சேர்ந்த சௌந்தர்யாவை நேற்று திருமணம் செய்து கொண்டார். இதற்கு பெண் வீட்டார் கடுப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெண்ணின் தந்தை சாமிநாதன் 19 வயது நிரம்பாத தனது மகளை கடத்தி திருமணம் செய்துகொண்டார். அவரிடமிருந்து பெண்ணை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு திருமண விவகாரம்: நாளை  விசாரணை!

இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ பிரபு திருமணம் விவகாரம் தொடர்பான ஆட்கொணர்வு மீதான மனு நாளை விசாரணைக்கு வருகிறது. இன்றே வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற பெண்ணின் தந்தை அர்ச்சகர் சாமிநாதனின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. அர்ச்சகர் சாமிநாதனின் மகள் சௌந்தர்யாவுக்கும் கள்ளக்குறிச்சி தனி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கும் நேற்று திருமணம் நடந்த நிலையில் இருவேறு சமூகத்தினர் என்பதால் திருமணத்திற்கு சாமிநாதன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு திருமண விவகாரம்: நாளை  விசாரணை!

முன்னதாக இதுகுறித்து விளக்கமளித்துள்ள எம்எல்ஏ பிரபு, நான் சௌந்தர்யாவை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்ளவில்லை.நாங்கள் இருவரும் காதலித்தோம். சௌந்தர்யா வீட்டில் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் தான் எனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.