கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

 

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

இந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க ஒப்புதல் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நாகப்பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளது. இந்த கல்லூரிகள் திறக்கப்படும் போது, அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகளே இருக்கும் நிலையில் 11 புதிய கல்லூரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

அதன் படி பல மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறுவாங்கூர் கிராமத்தில் ரூ.381.76 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள மருத்துவக் கல்லூரிக்கு இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.195 கோடியும் மாநில அரசு சார்பில் ரூ.186.76 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.7.72 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்பச் சுகாதார நிலைய கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.