கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது

 

கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர். உளுந்தூர்பேட்டை அடுத்த சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வேல்முருகன் என்பவரது 2-வது மனைவி லதா(30). இவர் அதேபகுதியை சேர்ந்த ஏழுமலை(40) என்பவரது நிலத்திற்கு, கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது

இந்நிலையில், ஏற்கனவே திருமணமான ஏழுமலைக்கும், லதாவிற்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் லதா திடீரென மாயமாகி உள்ளார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று மாலை அவர் உளுந்தூர்பேட்டை அரசு

கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது

மருத்துவமனையில் விஷம் குடித்த நிலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, வேல்முருகன் சென்று கேட்டபோது லதா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, வேல்முருகன் புகாரின் பேரில் ஏழுமலையை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், லதா உடனான கள்ளத்தொடர்பு காரணமாக தனது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அவரை கொலை

கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது

செய்ய ஏழுமலை திட்டமிட்டது தெரியவந்தது. இந்நிலையில், அடைக்கலம் தேடி தன்னிடம் வந்த லதாவை வெளியூர் அழைத்துச்சென்று உல்லாசம் அனுபவித்த அவர், பின்னர் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று லதாவிடம் கூறியுள்ளார். இதனை நம்பி அங்குள்ள ஏரிபகுதிக்கு சென்ற லதாவிற்கு தனது திட்டப்படி விஷம் கொடுத்து கொலை செய்ததாக அவர் ஒப்புகொண்டார். இதனையடுத்து, ஏழுமலை மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.