#kalaignar98 ‘நவீன தமிழகத்தின் தந்தை’ உதயநிதியின் உணர்ச்சிமிகு பதிவு!

 

#kalaignar98 ‘நவீன தமிழகத்தின் தந்தை’ உதயநிதியின் உணர்ச்சிமிகு பதிவு!

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், “பெரியாரின் பகுத்தறிவு- தமிழ்நாடு கண்ட அண்ணாவின் மாநில சுயாட்சி இவற்றை பாதுகாத்து-இந்திய ஒன்றிய மாநிலங்களுக்கு வழிகாட்டும் ஆசானாக நின்ற நம் முத்தமிழறிஞரின் 98வது பிறந்தநாளில் அவர் வழியில் உழைக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கரத்தை வலுப்படுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

#kalaignar98 ‘நவீன தமிழகத்தின் தந்தை’ உதயநிதியின் உணர்ச்சிமிகு பதிவு!

மற்றொரு பதிவில், “நவீன தமிழகத்தின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞரின் 98வது பிறந்த நாளில் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அமைச்சர்கள், கழக நிர்வாகிகளுடன் சென்று கலைஞர் ஓய்வகத்தில் மரியாதை செய்தோம். எளியோர் மேன்மையை அடிநாதமாக கொண்டு உழைத்த கலைஞர்வழியில் பயணிப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நிதியமைச்சர் பி.பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசியல் பொதுவாழ்விற்கு என்னை அழைத்து,செயலால் எனது முன்னோர்களைப் போல புண்ணியம் சேர்க்க வைத்திட்ட நவீன தமிழகத்தின் சிற்பி,பெருமைமிகு தலைவர் கலைஞரின் 98வது பிறந்தநாளில் நன்றியோடு வணங்குகிறேன்.அவர் காட்டிய திசையில் கழகமும், முதல்வர் ஸ்டாலின் அரசும் என்றைக்கும் பயணிக்கும்#KalaignarForever ” என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த தமிழன் பிரசன்னா, “உங்களை தெரிந்துகொள்ள இவர்களுக்கு இந்த பிறவி போதாது…உங்களை எதிர்ப்பவர்களின் வேர்களுக்கு நீர் ஊற்றி அவர்களுக்கு உயிர் கொடுத்து நீங்கள் தான்‌ என்று வாழ்க நீ எம்மான்இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” அப்பா ” ” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.