“2 எதிரிகளுடன் ஒரே நேரத்தில் திமுக மோதி வருகிறது” : கருணாநிதி நினைவு தினத்தில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

 

“2 எதிரிகளுடன் ஒரே நேரத்தில் திமுக மோதி வருகிறது” : கருணாநிதி நினைவு தினத்தில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதேபோல துரைமுருகன், டி ஆர் பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

“2 எதிரிகளுடன் ஒரே நேரத்தில் திமுக மோதி வருகிறது” : கருணாநிதி நினைவு தினத்தில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

பின்னர் கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் பணிபரிந்து வரும் முன்கள பணியாளர்களுக்கு கருணாநிதி நினைவிடத்தில் வைத்து நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், எங்கெங்குக் காணினும் கலைஞர்! என்ற காணொலியை தனது சமூக வலைதளப் பக்கங்களில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

https://www.pscp.tv/w/1vOxwkemkaLxB

இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின், ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளுடன் சலைக்காமல் மோதிக் கொண்டு இருக்கிறோம். தமிழ் மக்களுக்கு எதிரான மாநில அரசு தமிழ் நாட்டுக்கு எதிரான மத்திய அரசுடன் திமுக மோதி வருகிறது. அவர்களை வெல்வோம்; இரண்டு எதிரிகளையும் வென்று ஆறாம் முறையாக திமுகவை அரியணையை ஏற்க கருணாநிதி நினைவு நாளில் மு க ஸ்டாலின் சூளுரை ஏற்றுள்ளார்.