காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு : ராமதாஸ் குடும்பம் தான் காரணம் என குற்றச்சாட்டு!

 

காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு : ராமதாஸ் குடும்பம் தான் காரணம் என குற்றச்சாட்டு!

மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அப்போது காடுவெட்டி குருவின் ஆதரவாளர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை, காடுவெட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், பாமக பிரமுகருமான சின்னபிள்ளை, அவரது சகோதரர் காமராஜ் ஆகியோர் பிடித்து வைத்துள்ளனர்.

காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு : ராமதாஸ் குடும்பம் தான் காரணம் என குற்றச்சாட்டு!

இதனால் பிடித்து வைத்துள்ள பைக்கை மீட்டு செல்ல, காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது காமராஜ் மகன் சதீஷுக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மூவரும் அரிவாளால் தக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காயமடைந்த மகன் கனலரசன், மருமகன் மனோஜ், அவரது அண்ணன் மதன் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

காடுவெட்டி குரு மகனுக்கு அரிவாள் வெட்டு : ராமதாஸ் குடும்பம் தான் காரணம் என குற்றச்சாட்டு!

இதுகுறித்து கூறும் குருவின் தாய் கல்யாணி, ராமதாஸ் குடும்பத்தின் தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.