“உதயநிதி இரட்டைவேடம் போடுகிறார்” – காடேஸ்வர சுப்பிரமணியம்

 

“உதயநிதி இரட்டைவேடம் போடுகிறார்” – காடேஸ்வர சுப்பிரமணியம்

திருச்சி

இந்து முன்னணி அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் அதன் தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கவும், கன்னியாகுமரியை தமிழ்நாட்டுடன் இணைக்க போராடிய தானுலிங்க நாடாருக்கு அரசுவிழா எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்து முன்னணியின் வழக்கறிஞர் பிரிவு, பெண்கள் பிரிவு மற்றும் ஆட்டோ தொழிற்சங்கம் உள்ளிட்ட கிளை அமைப்புகளும் தொடங்கி வைக்கப்பட்டது.

“உதயநிதி இரட்டைவேடம் போடுகிறார்” – காடேஸ்வர சுப்பிரமணியம்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வர சுப்பிரமணியம், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்கு பாஜக – அதிமுக கூட்டணி வலுசேர்க்கும் என்றும் தெரிவித்தார். மேலும்,உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தருமபுரம் ஆதினத்தை சந்தித்துள்ளார். ஒரு இடத்தில் திருநீறு பூச மறுப்பது, மற்றொரு இடத்தில் ஆதினத்தை சந்திப்பது என்பது உதயநிதியின் இரட்டைவேடத்தை காட்டுவதாகவும் தெரிவித்தார்.