கையை வெட்டுவோம்! ஆ.ராசாவை எச்சரித்த அமைச்சர் கடம்பூர் செ ராஜூ

 

கையை வெட்டுவோம்! ஆ.ராசாவை எச்சரித்த அமைச்சர் கடம்பூர் செ ராஜூ

ஜெயலலிதா நினைவிடத்தில் கை வைத்தால் கையை வெட்டுவோம் என அமைச்சர் கடம்பூர் செ ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையில் செய்தியாளர்களிடம் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜூ, “ஜெயலலிதாவை பற்றி பேச ஆ.ராசாவிற்கு அருகதை கிடையாது. காற்றில் கூட ஊழல் செய்ய முடியும் என்று உலகிற்கு நிரூபித்துக் காட்டிய விஞ்ஞானி ஆ ராசா. 2ஜி ஊழல் வழக்கு தொடர்பாக ஆ ராசாவும் கனிமொழியும் ஜோடியாக திகார் சிறையில் இருந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. ஆ ராசா நாட்டு பிரச்சனைக்கோ, மக்கள் பிரச்சனைக்கோ சிறை செல்லவில்லை. ஆ ராசா, காங்கிரஸ் அரசினால் வழக்குப் போட்டு கைது செய்யப்பட்டார். திமுக தலைவர் கருணாநிதி கூட கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொன்னார்.

கையை வெட்டுவோம்! ஆ.ராசாவை எச்சரித்த அமைச்சர் கடம்பூர் செ ராஜூ

ஆ ராசாவிற்கு நாவடக்கம் வேண்டும். உலகத் தத்துவங்களை ஆ.ராசா பேசுகிறார். அதைவிட பேச எங்களுக்கும் தெரியும். முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ஏதோ ஓர் எழுத்து எழுதுவோம், இடிப்போம் என்று கூறியுள்ளார் . இடித்தால் அவர் கை வெட்டப்படும் என துணிச்சலாக சொல்கிறோம். அதிமுக தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஒரு ராஜா அல்ல ஓராயிரம் ராஜா வந்தாலும் இருக்கின்ற இடம் தடம் தெரியாமல் அழிந்து போவார்கள். ஜெயலிதா சமாதியில் ஒரு கருத்தை எழுத நினைத்தால் கருணாநிதி நினைவிடத்தில் நாங்கள் எழுதத் தொடங்கினால் அந்த கல்லறை பத்தாது , மெரினா கடற்கரையே பத்தாது. ஜெயலலிதா பற்றி இழிவாகப் பேசினால் நாட்டில் நடமாட முடியாத நிலையை ஆ ராசா சந்திப்பார்‌” எனக் கூறினார்.