எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் கொரோனாவைவிட மோசமான விஷக்கிருமிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

 

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் கொரோனாவைவிட மோசமான விஷக்கிருமிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியவர்கள் கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் என அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அருகே கயத்தாரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ, “எம்ஜிஆர் சிலை மீது காவி துண்டு போர்த்தியது சமூக விரோதிகளின் செயல். கொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இதுபோன்றவர்கள் சமூக ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள். மத நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிப்பவர்கள். அத்தனைபேரையும் அடையாளம் கண்டு புறந்தள்ளி தண்டிக்கப்பட வேண்டும். மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனாவை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.

எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் கொரோனாவைவிட மோசமான விஷக்கிருமிகள்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

இந்த நேரத்தில் சமூக விரோதிகள் இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள் என்றால் அவரை நிச்சயமாக சட்டத்திற்கு முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இப்படிப்பட்டவர்களே அரசு மட்டுமல்ல, மக்களும் விழிப்போடு இருந்து கண்டறிந்து அவர்களை சமூகத்தில் இருந்து புறந்தள்ள வேண்டும் என்பது எனது வேண்டுகோள்” எனக்கூறினார்.