“எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

 

“எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவுக்கு எதிராக பாஜகவின் எஸ்.வி. சேகர் தமிழக முதல்வர் மற்றும் அதிமுகவினரை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் உங்கள் கட்சிக்கு அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் வையுங்கள் என்றும் கட்சிக்கொடியிலிருந்து அண்ணா படத்தை தூக்குங்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

“எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்த நிலையில் இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,எஸ்வி சேகரின் கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் ஏதாவது பேசி விட்டு வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் என்றும் கூறி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

“எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர்” : அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம்!

இந்நிலையில் எஸ்.வி. சேகர் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “எஸ். வி. சேகருக்கு அடையாளம் தந்தது அதிமுக தான். அவர் நன்றி மறந்தவர்” என்று விமர்சித்துள்ளார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கம் பிளவுபட்டு பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம் உருவாகியுள்ள நிலையில் அது குறித்து பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, ‘ தயாரிப்பாளர் சங்கத்தினர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தரும் என்றும் நடிகர்கள், தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒற்றுமையாக இருந்தால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிடும்’ என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.