முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மரணம்!

 

முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மரணம்!

முன்னாள் மத்திய அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கடம்பூர் ஜனார்த்தனம் வயோதிகம் காரணமாக தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் திடீர் மரணம்!

மறைந்த கடம்பூர் ஜனார்த்தனனுக்கு வயது 91. இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் நின்று நான்கு முறை தேர்தலில் வெற்றி பெற்றவர். கடந்த 1984, 1989,1991 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர். அதிமுகவில் கடம்பூர் நகர செயலாளர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர், அனைத்திந்திய எம்.ஜீ.ஆர் மன்ற மாநில செயலாளராக பதவி வகித்துள்ளார்.

கடம்பூர் ஜனார்த்தனம் 1998 முதல் 1999 வரையில் மத்திய இணையமைச்சராக இருந்தார். 1998 முதல் 1999 வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சகத்தின் கூடுதல் வருவாய் (வருவாய், வங்கி மற்றும் காப்புறுதி) மற்றும் மாநில ஊழியர், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சராக இருந்தார்.

வயது முதிர்வால் உடல்நலம் குன்றிய இவர் கடந்த நவம்பர் மாதம் முதல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று உயிரிழந்தார்.