தந்தை பெரியாரா? மோடியா? முடிவு செய்வீர் – கீ.வீரமணி

 

தந்தை பெரியாரா? மோடியா? முடிவு செய்வீர் – கீ.வீரமணி

தந்தை பெரியாரே நமது பேராயுதம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் பெரியாரின் கொள்கைகளை ஒழிப்பதற்காகவே பாஜக தமிழகத்தில் காலடி எடுத்துள்ளது என பேசிய பாஜக இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யாவுக்கு கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரா? மோடியா? முடிவு செய்வீர் – கீ.வீரமணி

இதுகுறித்து கீ.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் அடையாளமான தந்தை பெரியார் கொள்கைகளை ஒழிக்கவே பாஜக காலடி எடுத்து வைத்துள்ளதாம். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக 95 வயதிலும் உழைத்த ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார். கட்சி, மதம், ஜாதி, அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒப்பாரும் மிக்காருமில்லா தலைவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரா? பாஜகவா? தந்தை பெரியாரா? மோடியா? தமிழர்கள் யார் என்று காட்ட வேண்டாமா? தமிழ்மண் எத்தகையது என்பதை நிரூபிக்க வேண்டாமா? அரிய சந்தர்ப்பம்; சரியான தருணம் இது; முடிவு செய்வீர். தந்தை பெரியாரே நமது பேராயுதம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.