“சசிகலாவை சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடைபெறுகிறது”

 

“சசிகலாவை சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடைபெறுகிறது”

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “தமிழகத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது, வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இலங்கை கடற்படை மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மீனவர்களுக்கு இழப்பீட்டு தொகையை 2 கோடியாக உயர்த்தி தர வேண்டும்.

“சசிகலாவை சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடைபெறுகிறது”

அதிமுக ஆட்சி முடிவதற்குள் ஆளும் கட்சியினர் திட்டங்கள் வழியே கொள்ளை அடிக்க நினைக்கிறார்கள். பேரறிவாளன் விடுதலை குறித்த விவகாரம் கிரிக்கெட் பந்தாட்டம் போல நடக்கிறது. 7 தமிழர்களும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சசிகலாவுக்கு தண்டனை காலம் முடிந்ததால் வெளியே அனுப்ப வேண்டும். சசிகலாவுக்கு இவ்வளவு நாளாக கொரோனா தொற்று வராமல் இப்பொழுது எப்படி வந்தது என சந்தேகம் எழுகிறது. விடுதலை நேரத்தில் மருத்துவமனைகளை மாற்றி மாற்றி பந்தாட்டம் செய்கிறார்கள். சசிகலாவை சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடைபெறுகிறது என சந்தேகம் வருகின்றது. சசிகலா உடல்நிலை சந்தேகம் குறித்து கர்நாடக அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும்” எனக் கூறினார்.