பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாய்க்கு கொரோனா தொற்று!

 

பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாய்க்கு கொரோனா தொற்று!

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மத்திய பிரதேசத்தின் முக்கிய தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு டெல்லியில் உள்ள சாகேத் பகுதியிலிருந்தும் மேக்ஸ் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரொனா இருப்பது உறுதியானது. இதனால் அவருடன் தங்கியிருந்த அவரது தாய்க்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரின் தாய்க்கு அறிகுறிகள்இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது தாய்க்கு கொரோனா தொற்று!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திக்விஜயன் சிங்கின் மகனுமான ஜெய்வர்தன் சிங் ஆகியோர் சிந்தியாவும், அவரது தாயும் விரைந்து குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.