பி.ஜே.பி-யின் ஆபாச அரசியல்! – ஜோதிமணி எம்.பி தாக்கு

 

பி.ஜே.பி-யின் ஆபாச அரசியல்! – ஜோதிமணி எம்.பி தாக்கு

நங்கநல்லூரில் பெண் ஒருவரின் வீட்டில் சிறுநீர் கழித்து ஆபாச நடவடிக்கையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி தலைவர் சுப்பையாவை கைது செய்வதை விட்டுவிட்டு, குற்றவாளிக்கு ஆதரவாக பா.ஜ.க மற்றும் தமிழக போலீஸ் துணை நிற்பது ஆபாச அரசியல் என்று காங்கிரஸ் எம்.பி ஜோதி மணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பி.ஜே.பி-யின் ஆபாச அரசியல்! – ஜோதிமணி எம்.பி தாக்கு
இது தொடர்பாக ஜோதிமணி அளித்த பேட்டி ஒன்றில், “பிஜேபியின் அகில இந்திய மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி-யின் தலைவர் சுப்பையா ஒரு 69 வயது பெண்ணை துன்புறுத்த அவர் வீட்டின் முன் சிறுநீர் கழித்து, சுய இன்பம் செய்துள்ளார். இவர் ஒரு மருத்துவர் வேறு. இதுகுறித்த சிசிடிவி பதிவு ஆதாரமாக உள்ளது.

பி.ஜே.பி-யின் ஆபாச அரசியல்! – ஜோதிமணி எம்.பி தாக்கு
இவரை பதவியில் இருந்து நீக்கவேண்டிய பிஜேபியும், கைதுசெய்ய வேண்டிய தமிழக காவல்துறையும் குற்றவாளிக்கு ஆதரவாக நிற்கின்ற அவலம் நடந்துகொண்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு அழுத்தம் கொடுத்து புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுதான் பிஜேயின் அரசியல். பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகும்போது கூட அதை ஆதரிப்பது ஆபாச அரசியல் அல்லாமல் வேறு என்ன? தாய் வயதில் உள்ள ஒரு பெண்மணிக்கு எதிராக இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்ட ஒரு நபர் நாளை சமூகத்தில் வேறு பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள மாட்டார் என்பதற்கு சென்னை போலீஸ் என்ன உத்தரவாதம் தருகிறது.

பி.ஜே.பி-யின் ஆபாச அரசியல்! – ஜோதிமணி எம்.பி தாக்கு
நாங்கள் இந்துக்களை காப்பாற்றுகிறோம் என்று பா.ஜ.க கூறிக்கொள்கிறது. இந்துக்களில் 70 சதவிகிதம் பேருக்கு துரோகம் செய்யும் பா.ஜ.க எப்படி இந்துக்களைக் காப்பாற்றும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.