ஜெயராஜ், ஃபெனிக்சுக்கு நீதி வேண்டும்! – கனிமொழி மாஸ்க்கால் பரபரப்பு

 

ஜெயராஜ், ஃபெனிக்சுக்கு நீதி வேண்டும்! – கனிமொழி மாஸ்க்கால் பரபரப்பு

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மாஸ்க்கை கனிமொழி எம்.பி அணிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயராஜ், ஃபெனிக்சுக்கு நீதி வேண்டும்! – கனிமொழி மாஸ்க்கால் பரபரப்புதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர்கள் ஜெயராஜ், அவரது மகன் ஃபெனிக்ஸ் போலீஸ் தாக்குதல் காரணமாக நீதிமன்ற காவலின்போது உயிரிழந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ஜெயராஜ், ஃபெனிக்ஸ் என்று இதுவரை போலீசார் கூறி வந்ததற்கு எதிராக சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி உள்ளது. இது குறித்து கனிமொழி எம்.பி-யிடம் கருத்து கேட்டபோது, “சாத்தான்குளம் சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் குறிப்பிட்டிருந்த தகவல்கள் அனைத்தும் பொய் என்பது உறுதியாகி உள்ளது. குடும்பத்தினரும், நண்பர்களும் தெரிவித்த கருத்துக்கு ஆதாரம் கிடைத்துள்ளது” என்றார்.
ஜெயராஜ், ஃபெனிக்ஸ் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற மாஸ்கை கனிமொழி அணிந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா பீதி காரணமாக கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு கூறி வரும் நிலையில், மாஸ்கில், “ஜஸ்டிஸ் ஃபார் ஜெயராஜ் அன்ட் ஃபெனிக்ஸ்” என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட மாஸ்கை கனிமொழி அணிந்திருந்தார். மேலும், தூத்துக்குடியில் தி.மு.க தொண்டர்கள், பொது மக்களுக்கும் இந்த மாஸ்கை கனிமொழி வழங்கினார்.