ஜூன் மாத ரேஷன் பொருட்கள்… இன்றுமுதல் வீடுகளை தேடி வரும் டோக்கன்!

 

ஜூன் மாத ரேஷன் பொருட்கள்… இன்றுமுதல் வீடுகளை தேடி வரும் டோக்கன்!

தமிழக ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்களை பெற இன்று முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வருகின்ற 7 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜூன் மாத ரேஷன் பொருட்கள்… இன்றுமுதல் வீடுகளை தேடி வரும் டோக்கன்!

இந்நிலையில் இன்று முதல் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கான டோக்கனை நியாய விலை கடை ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கவுள்ளனர. டோக்கனில் குறிபிட்ட நாள் மற்றும் நேரத்தில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

ஜூன் மாத ரேஷன் பொருட்கள்… இன்றுமுதல் வீடுகளை தேடி வரும் டோக்கன்!

வரும் 5ஆம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம் துவரம் பருப்பு மட்டும் சில காரணங்களால் ஜூன் 7 முதல் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேபோல் முதல்கட்ட நிவாரண தொகை பெறாதவர்கள் இந்த மாதம் பெற்று கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.