பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… ஜூடோ பயிற்சியாளர் கைது!

 

பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… ஜூடோ பயிற்சியாளர் கைது!

அண்மை காலமாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பள்ளி ஆசிரியர்களும் பயிற்சியாளர்களும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி பெற்றோர்களை மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை… ஜூடோ பயிற்சியாளர் கைது!

இதைத் தொடர்ந்து தற்போது, சென்னையில் தற்காப்புக் கலை நடத்திவரும் பயிற்சியாளர் ஒருவர் பயிற்சிக்காக வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த 26 வயது பெண், அண்ணாநகர் காவல் நிலையத்தில் கராத்தே மற்றும் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜுக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு கெபிராஜ் நடத்தி வந்த தற்காப்பு கலை பயிற்சியகத்தில் தான் சேர்ந்ததாகவும் போட்டிக்காக நாமக்கல் சென்று திரும்பும் வழியில் காரில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ஒத்துழைக்காததால் தன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அண்ணாநகர் போலீசார், கெபிராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.