ஜெயலலிதா பல்கலை. தொடர்பான வழக்கு… திடீரென்று விலகிய நீதிபதிகள் – தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

 

ஜெயலலிதா பல்கலை. தொடர்பான வழக்கு… திடீரென்று விலகிய நீதிபதிகள் – தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து, விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரியும், பதிவாளரை நியமிக்க கோரியும், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா பல்கலை. தொடர்பான வழக்கு… திடீரென்று விலகிய நீதிபதிகள் – தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அந்த மனுவில், “டாக்டர்.ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கான துணை வேந்தர் நியமிக்கப்பட்டு பல்கலைக்கழக கட்டுமானத்திற்காக செம்மேடு கிராமத்தில், 70 ஏக்கர் நிலம் கடந்த ஆட்சியில் ஒத்துக்கப்பட்டபோதும், தற்போதைய அரசின் புறக்கணிப்பால் பல்கலைக்கழகம் இன்னும் பழைய தாலுகா அலுவலகத்தில் செயல்படுகிறது. இன்னும் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளரும்,போதுமான பணியாளர்களும் நியமிக்கப்படாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா பல்கலை. தொடர்பான வழக்கு… திடீரென்று விலகிய நீதிபதிகள் – தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்ததைடுத்து, வரும் திங்கள்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.