‘விரைவில் பாஜக ஆட்சி மலரும்’ : ஜே.பி.நட்டா பேச்சு!

 

‘விரைவில் பாஜக ஆட்சி மலரும்’ : ஜே.பி.நட்டா பேச்சு!

புதுச்சேரியில் விரைவில் பாஜக ஆட்சி மலரும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பாஜக முக்கிய பிரமுகர்களுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

‘விரைவில் பாஜக ஆட்சி மலரும்’ : ஜே.பி.நட்டா பேச்சு!

இந்த நிலையில், இன்று புதுச்சேரிக்கு ஜேபி நட்டா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் 52 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டனர். புதுச்சேரி முதல்வராக இருக்கும் நாராயணசாமி எந்த கடனையும் தள்ளுபடி செய்யாமல் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். புதுச்சேரியில் பாஜக ஆட்சி மலரும் என்று கூறினார்.

மேலும், எனக்கு அளித்த வரவேற்பு பார்க்கையில் 23க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. வளர்ச்சியும் ஊழலற்ற ஆட்சியும் பாஜகவால் மலரப் போகிறது. அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜேபி நட்டா தெரிவித்தார்.