ராபியாவை கொடூரமாக கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் – கொதித்தெழுந்த ஜோதிமணி!

 

ராபியாவை கொடூரமாக கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் – கொதித்தெழுந்த ஜோதிமணி!

டெல்லியில் காவல்துறை பெண் அதிகாரி ராஃபியாவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டுமென காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ராபியாவை கொடூரமாக கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் – கொதித்தெழுந்த ஜோதிமணி!

அந்த பதிவில், “ராஃபியா ஒரு சிவில் டிபென்ஸ் அதிகாரி. கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு,மார்பகங்கள் வெட்டப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சமூட்டும் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுப்பதற்கு ஆரம்பகல்வி முதலே பெண்கள் சமத்துவம்,மரியாதை,பெண்கள் வெறும் உடல் அல்ல என்பது பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டும். குற்றவாளிகளை விரைவாக விசாரித்து கடுமையாக தண்டிக்கவேண்டும்.

பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் குற்றவாளிகளை மனசாட்சியில்லாமல் காப்பாற்ற முயற்சிப்பதும், வெட்கமில்லாமல் பொதுவெளியில் ஆதரிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படவேண்டும்.சமூகம் இதுபோன்ற ஆபத்தான நபர்களை புறக்கணிக்கவேண்டும். அப்பொழுதுதான் குற்றங்கள் குறையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.