‘அடிமையாக்கும் பணியை இனிதே முடித்துவிட்டார் எடப்பாடி’ – ஜோதிமணி ட்வீட்!

 

‘அடிமையாக்கும் பணியை இனிதே முடித்துவிட்டார் எடப்பாடி’ – ஜோதிமணி ட்வீட்!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி உறுதியாகியிருப்பது குறித்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘அடிமையாக்கும் பணியை இனிதே முடித்துவிட்டார் எடப்பாடி’ – ஜோதிமணி ட்வீட்!

அந்த பதிவில், “எம்ஜிஆர்,ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவை பிஜேபிக்கு அடிமையாக்கும் பணியை இனிதே முடித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.அடுத்து தமிழகத்தை அடிமையாக்க கனவு காண்கிறார்கள்.அது ஒருபோதும் நடக்காதென கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் நிரூபித்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலிலும் அதுவே நடக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமித்ஷா முன்னிலையில், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் உறுதிப்படுத்தினர். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, வாரிசு அரசியலை ஒழித்துக் கட்ட வேண்டும் என எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். அரசு நிகழ்ச்சியில் அரசியல் விவகாரம் குறித்து பேசியது எதிர்க்கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாகவே, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.