அரசியலை விட்டே விலக தயார்! ஜோதிமணி எம்.பி ஆவேசம்

 

அரசியலை விட்டே விலக தயார்! ஜோதிமணி எம்.பி ஆவேசம்

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் எம்பி ஜோதிமணி சவால் விடுத்துள்ளார்.

கரூரில், சேலம் புறவழிச் சாலையில் 3 இடங்களில் அமைக்கப்படும் மேம்பாலங்கள் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை முயற்சியால் கொண்டுவரப்பட்டது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேட்டி கொடுத்திருந்தார். இதற்கு ஜோதிமணி எம்பி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அரசியலை விட்டே விலக தயார்! ஜோதிமணி எம்.பி ஆவேசம்

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி எம்.பி, “செம்மடை, பெரியார் வளைவு, வாங்கப்பாளையம் பிரிவு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்க மக்களவையில் நான் பல முறை பேசினேன். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நேரில் சந்தித்து பேசினேன். அதன்படி, அந்த பாலங்கள் கட்டப்படும் என எனக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் என்னிடம் உள்ளது. முன்னாள் துணை சபாநாயகர் முயற்சியால் கொண்டுவரப்பட்டது என்ற ஆதாரங்களை ஒரு மணி நேரத்தில் போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன்” என ஆவேசமாக தெரிவித்தார்.