‘தேர்தலுக்கு முன் கலவரம் ஏற்படுத்த ஸ்டாலின் திட்டம்’ – ஜான் பாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டு!

 

‘தேர்தலுக்கு முன் கலவரம் ஏற்படுத்த ஸ்டாலின் திட்டம்’ – ஜான் பாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டு!

சாதிய அமைப்புகளுடன் சேர்ந்து திமுக பல சமூகங்களை பிரிக்கப் பார்ப்பதாக தமிழ்நாடு மக்கள் முன்னற்றத் தலைவர் ஜான் பாண்டியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7 பட்டியலின மக்களை ஒன்றிணைத்து தேவேந்திர குலவேளாளர் என்ற பட்டியலில் கொண்டு வர வேண்டும் என பல ஆண்டு காலமாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்த அரசு, தேவேந்திர குலவேளாளர் பட்டியலின் கீழ் கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

‘தேர்தலுக்கு முன் கலவரம் ஏற்படுத்த ஸ்டாலின் திட்டம்’ – ஜான் பாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டு!

இந்த நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்த ஜான் பாண்டியன், 40 ஆண்டு காலமாக மக்கள் இந்த அறிவிப்புக்கு காத்திருந்ததாகவும் தேவேந்திர குலவேளாளர் பட்டியலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பின் 5 லட்சம் மக்களை ஒன்று திரட்டி முதல்வருக்கு விழா எடுப்போம் என முதல்வரிடம் தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், தேவேந்திர குலவேளாளர் அறிவிப்புக்கு முதல்வருக்கு தான் நன்றி தெரிவித்ததாகக் கூறினார். மேலும் கொங்கு நாடு தேசிய கட்சி ஈஸ்வரன் போன்றோரை தூண்டிவிட்டு மக்களை பிரிக்க திமுக முயல்வதாகவும், தேர்தலுக்கு முன்னர் கலவரத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.