“போற வர்றவனுக்கெல்லாம் நான் ஏன் ஐ லவ் யூ சொல்லனும் “ஒரு தலை காதலன் பண்ண வேலைய பாருங்க

 

“போற வர்றவனுக்கெல்லாம் நான் ஏன் ஐ லவ் யூ சொல்லனும் “ஒரு தலை காதலன் பண்ண வேலைய பாருங்க


ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்த ஒரு வாலிபர் அந்த பெண்ணை ஒரு கோடரியால் தாக்கியதால் போலீசார் அவரை கைது செய்தார்கள் .

“போற வர்றவனுக்கெல்லாம் நான் ஏன் ஐ லவ் யூ சொல்லனும் “ஒரு தலை காதலன் பண்ண வேலைய பாருங்க


தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வசிக்கும் ராகுல் என்ற 25 வயதான வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார் .அதனால் அவர் இதயம் முரளி போல அந்த பெண்ணிடம் பல முறை ஜாடை மாடையாக பல முறை தன் காதலை கூறியுள்ளார் .பிறகு நேரடியாகவும் ,ஊடகத்தின் மூலமாகவும் தன்னுடைய காதலியிடம் அவர் காதலை வெளியிட்டார்
ஆனால் அந்த பெண்ணுக்கு ராகுலை கண்டாலே பிடிக்கவில்லை .அதனால் அவரின் காதலை நிராகரித்து விட்டார் .மேலும் ராகுலை பிடிக்கவில்லை என்று அவர் பலமுறை அவரின் முகத்துக்கு நேராகவே சொல்லியும் விட்டார் .ஆனால் அந்த பெண் அப்படி சொல்லியும் கேட்காத ராகுல் அவரை விடாமல் துரத்தினார் .இதனால் அந்த பெண் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் அந்த பெண்ணின் புகாரை பெற்று ராகுலை கூப்பிட்டு எச்சரித்து அனுப்பினார்கள் .
இதனால் ராகுல் அந்த பெண்ணின் மீது இன்னும் அதிக கோபம் கொண்டார் .அதனால் அவரை பழி வாங்கும் எண்ணம் அவருக்கு மேலோங்கியது .அதனால் அவரை பழிதீர்க்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தார் .இந்நிலையில் அந்த பெண் கடந்த வாரம் ஒரு நாள் அந்த பகுதியில் உள்ள ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது ராகுல் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு ஒரு விறகு வெட்டும் கோடரியை எடுத்துக்கொண்டு வந்தார் .அதன் பிறகு அவர் அந்த பெண்ணை அந்த கோடரியால் தாக்கினார் .அதனால் அந்த பெண் படு காயமுற்று கிடந்தார் .அப்போது அந்த வழியே வந்த சிலர் அந்த பெண்ணை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தார்கள் .அதன் பின்னர் போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணை தாக்கிய காதலனையும் அவரின் நண்பர்களையும் கைது செய்தார்கள் .

“போற வர்றவனுக்கெல்லாம் நான் ஏன் ஐ லவ் யூ சொல்லனும் “ஒரு தலை காதலன் பண்ண வேலைய பாருங்க