மூத்த மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் டாக்டர் புகார் !! தலைமறைவான டாக்டருக்கு போலீஸ் வலை !!

 

மூத்த மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் டாக்டர் புகார் !! தலைமறைவான டாக்டருக்கு போலீஸ் வலை !!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்ச்சியில் செயல்பட்டு வரும் ராஜேந்திர இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த வரும் ஒரு மூத்த மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார். கோவிட் -19 வார்டில் பணிபுரியும் ஜூனியர் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் பணிபுரியும் அந்த பெண் மருத்துவரை தன்னுடைய அறைக்கு வருமாறு அழைத்துள்ளார் அந்த மூத்த மருத்துவர். பின்னர் அறைக்கு அந்த பெண் டாக்டர் சென்றவுடன் விளக்குகளை அணைத்துவிட்டு.

மூத்த மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பெண் டாக்டர் புகார் !! தலைமறைவான டாக்டருக்கு போலீஸ் வலை !!அந்த டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்த பெண் டாக்டர் எவ்வளவோ முயற்சித்தும் வலுக்கட்டாயமாக அந்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் மருத்துவர் புகார் அளித்துள்ளார். விஷயத்தை கேள்விபட்ட மருத்துவமனை நிர்வாகம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் மூத்த வயதுடைய மருத்துவர் அருண்குமார் மவுரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜூனியர் டாக்டர்கள் சங்கம், ரிம்ஸ், இந்த வழக்கில் விரைவான நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.