‘சாத்தான்குள வழக்கில் விரைவில் தண்டனை தேவை’.. ஜெயராஜின் மகள் பெர்ஸிஸ் பேட்டி

 

‘சாத்தான்குள வழக்கில் விரைவில் தண்டனை தேவை’.. ஜெயராஜின் மகள் பெர்ஸிஸ் பேட்டி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘சாத்தான்குள வழக்கில் விரைவில் தண்டனை தேவை’.. ஜெயராஜின் மகள் பெர்ஸிஸ் பேட்டி

அதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், எல்லா காவலர்களிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது. அதனைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ போலீசார் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே சிபிஐ அதிகாரிகள் 4 பேருக்கும், கைதான காவலர் பால்துரைக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அதனால் அதிகாரிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாத நிலையில், குற்றவாளிகளுக்கு தண்டனை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை ஜெயராஜின் மகள் பெர்ஸிஸ்க்கு முதல்வர் பழனிசாமி பணி நியமன ஆணையை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெர்ஸிஸ், ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கை விரைந்து விசாரித்து தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் வேதனையில் இருந்து மீள அரசு வேலைத்தந்துள்ளது, நீதியை நிலைநாட்ட தமிழக அரசு உதவும் என்றும் வழக்கை நியாயமாக விசாரித்து தண்டனை பெற்று தருவோம் என்ற நம்பிக்கையை அரசு அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.