வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை திருட்டு: கொள்ளையர்கள் கைவரிசை!

 

வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை திருட்டு: கொள்ளையர்கள் கைவரிசை!

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகையை கொள்ளையர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வசித்து வருபவர் காளிமுத்து. இவரது சொந்த ஊர் மதுரை. டையிங் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவர், தனது குடும்பத்துடன் ஆறுமுகம் பாளையத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இல்ல நிகழ்விற்காக குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்று இருந்த காளிமுத்து, இன்று காலை வீடு திரும்பினார்.வீ ட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காளிமுத்து, உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 16 சவரன் நகையும் 30 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

வீட்டின் பூட்டை உடைத்து 16 சவரன் நகை திருட்டு: கொள்ளையர்கள் கைவரிசை!

இதையடுத்து பல்லடம் போலீசில் காளிமுத்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளையர்களின் தடயத்தை சேகரித்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். பட்ட பகலில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.