பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை; திருவள்ளூரில் பரபரப்பு!

 

பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை; திருவள்ளூரில் பரபரப்பு!

திருவள்ளூர் அருகே சுமார் 1 மணி நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து, 29 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே இஎஸ்என் நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மனைவி சசிகலா. வெங்கடேசன் அம்பத்தூரில் தொழிற்சாலை ஒன்று நடத்தி வரும் நிலையில் அவர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு சென்றிருக்கிறார். அவரது மனைவியும் காலை 11 மணிக்கு, வீட்டை பூட்டி விட்டு வங்கிக்கு சென்றிருக்கிறார். இதனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த திருடர்கள், சசிகலா வெளியே சென்றவுடன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 29 சவரன் தங்க நகைகளையும், ஒரு லேப் டாப்பையும் திருடிச் சென்றுள்ளனர்.

பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை; திருவள்ளூரில் பரபரப்பு!

இதனைத் தொடர்ந்து சரியாக 12.50மணிக்கு வங்கியில் இருந்து வீடு திரும்பிய சசிகலா, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்த உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

பட்ட பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 29 சவரன் நகை கொள்ளை; திருவள்ளூரில் பரபரப்பு!

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளில் ஏதேனும் பதிவாகி இருக்கிறதா என சோதனை செய்து வருகின்றனர். பட்ட பகலில், வங்கிக்கு சென்று வீடு திரும்புவதற்குள்ளாக நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.