கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலிலிருந்து நகைகள் திருட்டு! மருத்துவமனை ஊழியர்கள் கைது…

 

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலிலிருந்து நகைகள் திருட்டு! மருத்துவமனை ஊழியர்கள் கைது…

திருப்பதியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களிலிருந்து தங்க நகைகள் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் கோரப்பிடியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாள்தோறும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைக் கடந்தே உள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 37லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலிலிருந்து நகைகள் திருட்டு! மருத்துவமனை ஊழியர்கள் கைது…

இந்நிலையில் திருப்பதியில் உள்ள ஸ்விம்ஸ் மருத்துவமனையில் கடந்த 23 ஆம் தேதி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களிலிருந்து தங்க நகைகள் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான விசாரணையில் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களும், செவிலியர்களும் நகைகளை திருடியது அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நான்கு தங்க மோதிரங்களும், 6000 ரூபாயையும் பறிமுதல் செய்யப்பட்டன.