“எங்கள் மீது குறை சொல்பவர்களை இயேசுநாதர் பார்த்துக் கொள்வார்” : முதல்வர் பழனிசாமி

 

“எங்கள் மீது குறை சொல்பவர்களை இயேசுநாதர் பார்த்துக் கொள்வார்” : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா 2வது அலை வீசிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

“எங்கள் மீது குறை சொல்பவர்களை இயேசுநாதர் பார்த்துக் கொள்வார்” : முதல்வர் பழனிசாமி

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய முதல்வர் பழனிசாமி, “ஒரு மதத்தை மட்டும் நேசித்து மற்ற மதத்தை தவறாக பேசுபவன் நான் இல்லை. முதல்வர் பதவி மீது ஆசை இருக்கலாம் ஆனால் வெறி இருக்கக்கூடாது . எங்கள் மீது குறை சொல்பவர்களை இயேசு நாதர் பார்த்துக் கொள்வார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை வீசிவிடக் கூடாது. அதனால் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றார்.

“எங்கள் மீது குறை சொல்பவர்களை இயேசுநாதர் பார்த்துக் கொள்வார்” : முதல்வர் பழனிசாமி

தொடர்ந்து பேசிய அவர், “அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் திமுக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. பொங்கல் பரிசு அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் திமுகவினர் தமிழக அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றனர் ” என்று கூறினார்.