திருமாவளவன் ஒரு தேசவிரோதி; அவருக்கு யாரும் ஓட்டு போடாதீங்க: ஜீயர் ஆவேசம்

 

திருமாவளவன் ஒரு தேசவிரோதி; அவருக்கு யாரும் ஓட்டு போடாதீங்க: ஜீயர் ஆவேசம்

கடந்த செப்டம்பர் மாதம் மனு ஸ்மிருதி நூல் குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது. அவர் பேசிய முழு வீடியோவை வெளியிடாமல், பெண்களை இழிவு படுத்தி மனு ஸ்மிருதி நூலில் குறிப்பிடப்பட்டிருந்த வரிகளை திருமாவளவன் குறிப்பிட்டதை மட்டும் எடிட் செய்து சிலர் அந்த வீடியோவை வைரலாக்கினர். இது சர்ச்சையை கிளப்பியது. இதற்காக திருமாவளவன் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

திருமாவளவன் ஒரு தேசவிரோதி; அவருக்கு யாரும் ஓட்டு போடாதீங்க: ஜீயர் ஆவேசம்

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜீயர் சடகோப ராமானுஜர், “கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண்களைப் பற்றி இழிவாக மனு சாஸ்திரத்தில் கூறியிருப்பதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். அந்தமாதிரி எவ்வித கருத்தும் மனு சாஸ்திரத்தில் இல்லை. ஆகையால் பெண்களைப் பற்றி தவறாக பேசிய திருமாவளவனுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக அரசு உடனடியாக அவரை விரைவில் கைது செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் தமிழகம் முழுவதுமிருந்து துறவிகள், பெண்கள் மற்றும் இந்து மக்களை திரட்டி சாலையில் இறங்கி போராட போவதாக தெரிவித்தார். மேலும் இனிவரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் திருமாவளவனை எந்த கூட்டணியிலும் சேர்க்க கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கிறேன். இந்து சமுதாய விரோதிகளுக்கு மக்கள் ஓட்டு போடக்கூடாது” என தெரிவித்தார்.